உக்ரைனுக்கு 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராக்கெட் சிஸ்டம், உள்ளிட்ட ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் பாரம்பரிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வரும் நிலையில், உக்ரைனுக்கு கூடுதலா 450 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில், நான்கு கூடுதல் ஹை மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் (HIMARS), 18 கடலோர மற்றும் ஆற்றங்கரை ரோந்துப் படகுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…