தமிழக கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. இதற்கு தடுப்பூசி செலுத்த அலட்சியம் காட்டுவதால் தான் என புகார்கள் எழுந்தது. இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதன்படி நாளை சென்னையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் நாளை 32 வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்றும், இதற்காக 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, வார்டு ஒன்றுக்கு 1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் என ஒட்டு மொத்தமாக 1,000 சுகாதார குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…