சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர் ஒருவரின் வாட்ஸ்அப் DP-யில் வலிமை பட புகைப்படம் இருந்ததாக சொல்லப்படுகிறது என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் வங்கியில் காவலாளிக்கு மயக்கம் மருந்து கொடுத்து, சக ஊழியர்களை கட்டிப்போட்டு ரூபாய். 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பான புகாரில் தலைமறைவான கொள்ளையர் முருகனுக்கு தொடர்புடைய 10 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வந்தனர்.இதனையடுத்து வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடித்து தந்தால் ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர் ஒருவரின் வாட்ஸ்அப் DP-யில் வலிமை பட புகைப்படம் இருந்ததாக சொல்லப்படுகிறது என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…