தமிழக அரசால் வழங்கப்பட்ட விருது தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு ஆர்.நல்லகண்ணு வழங்கியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதனைனை பெற்றுக்கொண்ட நல்லகண்ணு, விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன் ரூ.5,000 சேர்த்து, ரூ.10.05 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். தன்னலமற்ற அவரது இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…