நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சின்னதிர நடிகை சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரி தாக்கல் செய்த ஹேம்நாத் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…