இரண்டு இளைஞர்கள் சிவன் சிலைக்கு பீர் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சண்டிகரில் இரண்டு இளைஞர்கள் ஆற்றின் ஓரத்தில் இருந்த சிவன் சிலையின் மீது ஒருவர் பீர் அபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது, மற்றொருவர் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். இருவரும் செருப்பு காலுடன் காணப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பஜ்ரங் தளம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…