புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே யூ டியூபைப் பார்த்து துப்பாக்கி செய்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய 2 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ’விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோரின் வழியில் பொது மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளராக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்தோம்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் கபிலர் என்ற வாலிபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இவர்கள் மூன்று பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…