வேலூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவின் பொது ராட்டினம் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் கவுண்டன்ய மகாநதியின் வடக்குகரையில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் அச்சாணி உடைந்து சாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மக்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இருந்த போதிலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராட்டினம் சாய்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…