இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை 10க்கும் மேற்ப்பட்டவர்களை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த கோர விபத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…