நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னெற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்தக்கூடாத வர்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகள் அதிகளவில் உள்ளது.
அதாவது, துரோகம் செய்தவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்படுகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…