Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது..!

Bala August 10, 2022 & 12:34 [IST]
கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது..! Representative Image.

தஞ்சாவூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு கொண்டு வந்த 80 கிராம் கஞ்சாவை  பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரையும் கைது செய்துள்ளனர். 

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் அமிர்தராயன் கோட்டை நாகராஜன் என்பவரது மகன் காசிராஜன் என்பதும், தஞ்சாவூரில் இருந்து  கொண்டு வந்த 80 கிராம் கஞ்சா பொட்டலகங்களை விற்பனைக்கு கையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார்  காசிராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்