நமது தமிழர் மரபு படி, ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. அதன் அடிப்படையில், ஜூன் மற்றும் ஜூலை ஆங்கில மாதத்தின் இடையில் தமிழ் மாதமான ஆனி மாதம் மிகவும் விஷேசமான மாதமாக கொண்டாடப்படுகிறது. காரணம், அப்போது தான் நடராஜப் பெருமானுக்கு உகந்த ஆனி திருமஞ்சனம் விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் ஜூன் 26, 2023 அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகலமாக ஆனி திருமஞ்சனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதனால் கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பின்னர் ஆனி மாதத்தில் அந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அப்படியே இருக்கும். எனவே, இந்த வெப்ப அலையால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் போன்ற 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்படும்.
ஆனி திருமஞ்சனத்தின் மற்ற சிறப்புகள்
இந்த ஆனி உத்திரம் விஷேச நாளில் தான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் சிவபெருமான் உபதேசம் செய்தார்.
மேலும் அன்றைய நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.
ஆவுடையார் கோயிலில், இந்த ஆனித் திருமஞ்சன விழா முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் இந்நன்னாளில் வெள்ளித் தேரில் மாட வீதி உலாவாக வந்து மக்களுக்கு அருள் அளித்தார்.
ஆனித் திருமஞ்சன தரிசனம் பலன்கள்
பக்தர்கள் நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை காண்பதன் மூலம், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…