மத வேறுபாடின்றி மனதார வணங்குகின்ற ஒரு தெய்வம் தான் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை யார் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை போக்குவார் என்பது ஐதீகம். அந்த வகையில், சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு.
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
எப்படி சொல்ல வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினந்தோறும் 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை ஜபிப்பது நல்லது. ஒருவேளை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் சாய் பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் மட்டும் ஜபிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சாய் பாபாவின் பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…