கிறிஸ்துமஸ் தினம் என்றால், அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது மட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் இரவிற்கும் தனி ஒரு வரலாறே இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் ஈவ் குறித்த வரலாற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
✤ உலகமே இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாட காத்துக் கொண்டு இருக்கிறது.
✤ இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
✤ கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட்” மற்றும் “ மாஸ்" என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவாகியுள்ளது.
✤ கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4 வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ம் தேதி கொண்டாடி வந்தனர்.
✤ வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6 ம் தேதி அன்று இயேசு பிறந்ததாக கூறி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
✤ கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நிகழ்வாக Christmas Eve [ கிறிஸ்துமஸ் இரவு ] இருக்கிறது.
✤ கிறிஸ்துமஸ் இரவு என்பது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் அன்று இரவு கொண்டாடப்படுகிறது.
✤ கிறிஸ்துமஸ் இரவு தினத்திற்கு ஒரு வரலாறு உண்டு. கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு, ஐரோப்பாவில் இருந்த பிற மதங்களைச் சார்ந்த மக்கள் தங்களின் கலாச்சார விழாவாக குளிர்கால விழாவைக் கொண்டாடி வந்தனர்.
✤ அதன் பின் கிறிஸ்தவத்திற்கு மாறியதால், கிறிஸ்தவ சமய நம்பிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டியிருந்தது. இதனால் தங்களுடைய பழைய குளிர்கால கலாச்சார விழாவைக் கொண்டாட முடியவில்லை.
✤ கிறிஸ்துவ மக்கள் புதிய சமயமான கிறிஸ்தவத்திற்குள் இருந்து கொண்டே தங்களின் பழைய குளிர்கால கலாச்சார விழாவைக் கொண்டாட துவங்கினர்.
✤ ஆரம்பத்தில் குளிர்காலத்தை மையப்படுத்தி கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் இரவு , நாளடைவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்தி கொண்டாடும் விழாவாக மாறியது.
✤ கிறிஸ்துமஸ் தினத்தை விட கிறிஸ்துமஸ் இரவு முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துமஸ் இரவு, கிறிஸ்துமஸ் நாளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…