கோவில் திருவிழா ஒன்றில் இரண்டு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வலம் வந்தது பக்கதர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கோவில் திருவிழாக்களக்களை நடத்துவதில் சிக்கல் இருந்த நிலையில், தற்போது எந்தவித தடையுமின்றி அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள அக்ரா பாளையம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் அம்மன் வீதி உலா வந்தபோது, இரண்டு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, கங்கை அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதை பார்த்த அம்மன் பக்தர்கள் பரவசத்தில் திகைத்து நின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…