Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்கழி மாதத்தில் கோலம் மட்டும் போட்டால் போதாது.. இதையும் கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும்.. | Margali Matha Poojai in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மார்கழி மாதத்தில் கோலம் மட்டும் போட்டால் போதாது.. இதையும் கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும்.. | Margali Matha Poojai in TamilRepresentative Image.

கடும் பனிப்பொழிவு, பெருமாள் பஜனை, வாசலில் கோலமிடுதல் என மார்கழி மாதத்திற்கு என்றே தனித்துவமான சிறப்புகள் இருக்கின்றன. அதேபோல், இந்த மார்கழி மாதத்தில் புதிய விஷயங்களை தொடங்க தவிர்ப்பதால், இது அதிர்ஷ்டம் இல்லாத மாதம் என்றும் சொல்லிவிட முடியாது. உண்மையில், மாதங்களிலேயே மிக சிறந்த மாதம் எது என்று கேட்டால் அது மார்கழி தான். ஏனெனில், மார்கழி மாதம் என்பது பெருமாள் மற்றும் லட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த மாதம். இந்த சிறப்பான மாதத்தில் ஒருசில விஷயங்களை தவறாமல் செய்வதன் மூலம் ஒரு வருட பூஜை செய்த பலனை நம்மால் பெறமுடியும். அதுமட்டுமல்லாமல், பெண்கள் மனதில் நினைத்தது அனைத்தும் கைகூடும். அந்தவகையில், மங்களகரமான மார்கழியில் வீட்டில் உள்ள பெண்கள் செய்ய வேண்டிய மார்கழி மாத செயல்களை பற்றி பார்க்கலாம். 

மார்கழி மாதத்தில் கோலம் மட்டும் போட்டால் போதாது.. இதையும் கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும்.. | Margali Matha Poojai in TamilRepresentative Image

பொதுவாக நம் முன்னோர்கள், மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பசும்சாணத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும் தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால், இந்த காலத்தில் நம்மில் பலரும் இதை செய்வது கிடையாது. 

இந்த மார்கழியில் அதிகாலையில், எழுந்து நீராடிய பிறகு தான் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும். அப்படி உங்களுக்கு பசும்சானம் கிடைக்கவில்லை என்றால், தண்ணீரில் மஞ்சளை கலந்து அந்த தண்ணீரை தெளித்தும் கோலம் போடலாம். அதன்பிறகு, நீங்க போட்ட கோலத்தின் நடுவில், பசும்சாணம் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்கும பொட்டு வைக்கவேண்டும். 

மார்கழி மாதத்தில் கோலம் மட்டும் போட்டால் போதாது.. இதையும் கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும்.. | Margali Matha Poojai in TamilRepresentative Image

அதன் பின்னர், அந்த பிள்ளையாருக்கு அருகம்புல் அல்லது பூசணிப்பூவை வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இரண்டுமே கிடைக்கவில்லை என்றால், செம்பருத்து பூ, சாமந்தி பூ, ரோஜா பூக்களை வைக்கலாம். கோலம் போட்டுவிட்டு, உங்க வீட்டு பூஜை அறைக்கு சென்று சாமி படங்களுக்கு மலர்கள் வைத்து அலங்கரித்து, தீபம் ஏற்றிக்கொள்ளுங்கள்.

அதையடுத்து, பூஜை அறையிலும் ஒரு மஞ்சளால் பிள்ளையார் பிடித்து அதை ஒரு வெற்றிலையின் மீது வைத்து அதற்கு குங்கும பொட்டு, அருகம்புல் அல்லது மேலே கூறிய ஏதாவது ஒரு பூக்களை வைத்து மனமுருகி பூஜை செய்யவேண்டும். இந்த வழிபாடு முறைகளை நீங்க மார்கழி மாதம் முழுவதும் கடைப்பிடித்துவந்தால், புண்ணியம் கிடைப்பதோடு  ஒரு வருட பூஜை செய்த பலனை நம்மால் பெறமுடியும். 

மார்கழி மாதத்தில் கோலம் மட்டும் போட்டால் போதாது.. இதையும் கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும்.. | Margali Matha Poojai in TamilRepresentative Image

ஒருவேளை அந்த பிரம்ம முகூர்த்ததில் எழுந்திருத்து குளிக்க முடியாதவர்கள், முகத்தையாவது கழுவிக்கொண்டு பூஜை அறையில் ஒரு தீபமாவது ஏற்றிவிட வேண்டும். அதுபோல பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க முடியாதவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன்னராவது எழுந்திருக்க வேண்டும். எப்போதும் நீங்கள் செய்யும் பூஜையை விட இந்த மார்கழி மாதத்தில் நீங்கள் செய்யும் பூஜைக்கு பலன் அதிகமாக இருக்கிறது.

அதேபோல், மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் அரசமரம், வேப்பமரம் இருக்கும் கோவிலுக்கு செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் ரொம்ப நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். 

குறிப்பு: மேலே குறிப்பட்ட அனைத்து வழிபாடுகளையும் காலை 6 மணிக்கு முன்பாக செய்துவிடுவது சிறப்பு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்