பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை என கூறியுள்ளார்.
அதன்படி, “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கக்கூடாது என அமெரிக்கா இந்தியாவிடம் கூறியபோது அதை மறுத்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அந்த துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை, அதனால்தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பாகிஸ்தான் வாங்கவில்லை.
மேலும், இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை. பாகிஸ்தானின் நட்பு நாடாக அமெரிக்கா இருந்தபோதிலும் அமெரிக்கா பாகிஸ்தானை கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கவில்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…