Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிவேகமாக சென்ற பஸ்.. தலைகுப்புற கவிழ்ந்து விபத்து.. 40 பேர் பலி!!

Sekar Updated:
அதிவேகமாக சென்ற பஸ்.. தலைகுப்புற கவிழ்ந்து விபத்து.. 40 பேர் பலி!!Representative Image.

இன்று காலை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாஸ்பேலா உதவி ஆணையர் ஹம்சா அஞ்சும் இது குறித்து கூறுகையில், "கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் அந்த வாகனம் குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.

அதிவேகமாக சென்றதன் காரணமாக, லாஸ்பேலா அருகே யு-டர்ன் எடுக்கும் போது, ஒரு பாலத்தின் தூணில் பஸ் மோதியது. அது பின்னர் ஒரு பள்ளத்தில் சிக்கி தீப்பிடித்தது.

இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை செய்யப்படும், காயமடைந்த பயணிகள் லாஸ்பேலா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்." என்று தெரிவித்தார்.

ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார். எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எதி அறக்கட்டளையின் சாத் எதி தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்ததால், அதிவேகமாகச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்