Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 2: மறுபிறவியாக வந்த சாய்பாபா….! சீரடி சாய்பாபா அற்புதங்கள்…

Gowthami Subramani May 26, 2022 & 07:15 [IST]
Sai Baba History in Tamil Part 2: மறுபிறவியாக வந்த சாய்பாபா….! சீரடி சாய்பாபா அற்புதங்கள்… Representative Image.

Sai Baba History in Tamil Part 2: ஸ்ரீ சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். சாய் பாபா இந்துவாக பிறந்து முஸ்லீமாக வளர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். பிராமணக் குடும்பத்தில் பிறந்த சாய்பாபா முஸ்லீமாக எப்படி மாறினார் என்ற சத்திய சாயி பாபா வரலாறு பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது, சாய் நாதரின் அன்பு லீலைகளைப் பற்றி இதில் காண்போம்.

கோபால்ராவ் அரவணைப்பு

சாய் நாதரின் அம்மா, சிறுவனை அழைத்துக் கொண்டு ஞானியானகோபால் ராவ் தேஷ்முக் வீட்டிற்குச் சென்றார். சிறுவனின் முஸ்லீம் தாய்க்கு, கோபால் ராவ்-இடம் சிறுவனை விடுவதில் சிறிது தயக்கம் இருந்த போதிலும், கோபால் ராவ் வீட்டிற்குச் சென்றார். கோபால் ராவிற்கு சிறுவனைப் பார்த்த உடன் ஒரு அளவில்லா பிரியம் ஏற்பட்டது. பிராமணுக்குரிய அனைத்து அனுஷ்டானங்களையும் போற்றுபவர் சாய் நாதர். இவர் எப்படி முஸ்லீம் சிறுவனை ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி இருந்தது (Sai Baba History in Tamil).

Also Read | Sai Baba History in Tamil Part 1: பிராமணராய் பிறந்து முஸ்லீம் தம்பதியினருக்குக் குழந்தையான சாய்பாபா….!

 

துறவியின் மூலம்

ஆண்டவன் இதற்கும் ஒரு தீர்வு கொடுத்திருப்பார் அல்லவா..? அவ்வாறு, சிறிது காலத்திற்கு முன்பே, கோபால் ராவ் வீட்டிற்கு ஒரு துறவி வந்துள்ளார் (Sai Baba Story Tamil). அவரைக் கோபால் ராவ் அழைத்து, உபசரித்து வணங்கத் தொடங்கிய போது, அந்தத் துறவி தனது இரு கைகளையும் கூப்பிக் கொண்டு வணங்கினார்.

இராமானந்தரின் மறுபிறவி

அதன் பின், அந்தத்துறவி, கோபால் ராவைப் பார்த்து, “ஐயா! நீங்கள் யார் என்பதை நீங்களே உணர வில்லையா..? காசியில் பெருந்துறவியாக வாழ்ந்த இராமானந்த தீர்த்தரின் சீடராக விளங்கியவர் தான் இராமதாசனாக வாழ்ந்த மகாத்மா கபீர். அந்த இராமானந்தரின் மறுபிறவியே நீங்கள் தான். அப்படி இருக்க நீங்கள் என்னை வணங்குவது முறையாகுமா?” என்று கேட்டார் (Sai Baba History in Tamil).

அதற்கு அந்தத் துறவியிடம், ”ஐயா நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இராமானந்தரின் மறுபிறவியா? என்னால் நம்ப முடியவில்லையே?” என்று கோபால் ராவ் கேட்டார் (Sai Story Tamil).

சாய் நாதராக மகாத்மா கபீர்

ஐயா நான் சொல்வது முழு உண்மை. அது மட்டுமல்லாமல், மகாத்மா கபீரின் மறுபிறவியாக ஒரு பிராமணச் சிறுவன் பிறந்திருப்பதாகவும், அவர் தற்போது ஒரு முஸ்லீம் வீட்டில் வளர்ந்து கொண்டு வருவதாகவும் கூறினார் துறவி. மேலும், அந்தச் சிறுவன் உங்களைத் தேடி வருவான் என்றும், அந்த சமயத்தில், இராமானந்தர் எவ்வாறு கபீர் தாசரை ஏற்றுக் கொண்டாரோ, நீங்களும் அந்தச் சிறுவனம் மனமார ஏற்றுக் கொள்வீர்கள் என்று கூறியுள்ளார் அந்தத் துறவி (Sai Baba Stories in Tamil).

A person wearing a garment

Description automatically generated with low confidence

உண்மையாக நடந்த சம்பவம்

துறவி கூறியவாறே, முஸ்லீம் சிறுவன் தன்னை நாடியதை உணர்ந்த கோபால் ராவ் திகைத்து நின்றார். அப்போது, அந்த அன்னை, சிறுவனின் கையை கோபால் ராவின்கையில் கொடுத்தார்.

உடனே கோபால் ராவ், சிறுவனை அன்புடன் அணைத்து கொண்டு, சிறுவனை நானே வளர்ப்பதாகக் கூறி, அன்னையைத் திருப்பி அனுப்பினார். பின், அவருடன் தங்கியிருந்த அந்த சிறுவன் அவனுடைய மனம் முழுவதும் கோபால் ராவ் தேவரை குருநாதராகவே ஏற்றுக் கொண்டான் (History of Shirdi Sai Baba).

தந்தையாகவும், குருவாகவும்

கோபால் ராவ், அந்த ஊரிலுள்ள மக்களிடம் பெரு மதிப்பு கொண்டவராவார். இவருக்கு அபூர்வ சக்திகள் உள்ளன என்பதை மக்கள் பரிபூரணமாக நம்புவர். நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், இவரின் கைபட்ட அடுத்த கணமே குணம் அடைந்து விடும். இந்த காரணத்தால், இவரை ஒரு மகானாகக் கருதிப் போற்றி வந்தனர் அந்த ஊர் மக்கள்.

இப்படி பெரும்புகழ் மிக்க மகானான கோபால் ராவ், அந்தச் சிறுவனை சீடராக ஏற்றுக் கொண்டார். அவரை பாபா என்று அன்போடு அழைத்தார். பெற்றோர் இல்லாத அந்தச் சிறுவனுக்கு ஒரு தந்தையாகவும், குருவாகவும் இருந்து அவரைக் காத்து வந்தார். இவருடைய அளவில்லாத அன்பைப் பெறும் பாக்கியம் பாபாவிற்குக் கிடைத்தது.

Also Read | Sai Baba Viratham in Tamil: வியாழக்கிழமை நாள்களில் சாய்பாபா விரதத்தை இப்படி இருந்து பாருங்க..! நீங்க எண்ணிய காரணங்கள் அனைத்தும் உடனே நடக்கும்…!.

சகல சித்திகளை அறிந்தவர்

கோபால்ராவ் மாபெரும் மகான் ஆவார். இவர் சகல சித்திகளையும் செய்து காட்டுவதில் வல்லவர். இவருடைய சக்திகள் ஏராளம். கண்ணுக்குத் தெரியாமல் மறைதல், காற்றில் உலவுதல், நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற அனைத்தையும் பிரயோகிக்கும் தன்மை கொண்டவர். இதை அனைத்தையும் நேரில் பார்த்த பாபா அதிசயித்தார். இதன் மூலம், ஒரு நாள் கோபால் ராவ் தனது உயிரையே காப்பாற்றுவார் என்று பாபா எண்ணியதில்லை. அந்த நாளும் வந்தது.

சாய் பாபாவின் உயிரைக் காப்பாற்றும் அளவிற்கு அப்படி என்ன நேர்ந்தது. கோபால் ராவ் தனது சக்தியால், எவ்வாறு சாய் நாதரைக் காப்பாற்றினார்.. என்பது பற்றி அடுத்தப் பதிவில் காண்போம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்