ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் செயல்பாடுகளை பொருத்து தான் ஒருவரின் ஜாதகம் அமைகிறது. அதேபோல், ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில், நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் அள்ளிக் கொடுப்பதில் வள்ளலாகத் திகழ்கிறார். பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கு ஒரு உகந்த நாள் இருக்கும். அதுபோல குருபகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. 16 வளர்பிறை வியாழக்கிழமை உரிய முறையில் விரதம் இருந்து குருபகவானை வழிபாடு செய்தால், குருபகவானின் முழு அருளையும் பெறமுடியும் என்பது ஐதீகம். சுமார் 3 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குருபகவானின் பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.
விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமையன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடையை அணிந்து கொள்ளுங்கள். தண்ணீர் உட்பட எந்த உணவையம் எடுத்துக் கொள்ளாமல் அருகில் இருக்கும் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
குருபகவானுக்கு மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் நன்மை. அல்லது பாலில் குங்குமப்பூ கலந்து அதையும் அபிஷேகம் செய்யலாம்.
அன்றைய தினம் முழுவதும் குருபகவானுக்கு உரிய மந்திரங்களை படிக்கலாம். பின்னர், மாலை நேரத்தில் மஞ்சள் நிற இனிப்புகளை ஏழை மக்களுக்கு தானம் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் வாங்கியும் தானம் கொடுக்கலாம்.
அதன்பிறகு, இரவு நேரத்தில் உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு 16 வளர்பிறை வியாழக்கிழமைகள் முறையாக விரதம் இருந்தால், வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும். சரியான காலத்தில் திருமணம் பாக்கியம் ஏற்படும்.
ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் அவை நீங்கும். ஒருவேளை பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் அடுத்த வளர்பிறையில் வரும் வியாழக்கிழமையில் இருந்து கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக, தொழிலில் தொடர் சரிவு, பணக்கஷ்டம் இருப்பவர்கள் இந்த விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால், விரைவில் பணக்கஷ்டம் விலகி செல்வ வளம் பெருகும். குருவின் அருள் இருந்தாலே செல்வம் தானே சேரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…