ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு வைஷ்ணவ திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதிக்கு முன்பு கோபுரம் வாசலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று வைஷ்ணவ திருக்கார்த்திகை கொண்டாடப்பட்டது. ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இரண்டு இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த சொக்கப்பனை நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார், பெரிய பெருமாள் கோயில் முன்புறம் சொக்கப்பனை வைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே எழுந்தருளினர். பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…