Sai Baba History in Tamil: நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இரு… நீ வேண்டும் அத்தனை காரியங்களும் நடக்க உறுதுணையாக இருப்பேன் என்று நம்முடன் எப்போதும் உடனிருப்பவரே நம் சாய்நாதர்.
கடந்த பதிப்பில், சாய்நாதர் எவ்வாறு கோபால் ராவ் இல்லத்தில் தங்கி, அவருடைய அன்பிற்குரியவனாய் திகழ்ந்தார் என்பதைப் பற்றிப் பார்த்தோம். இந்துவாகப் பிறந்து முஸ்லீமாக வளர்ந்து கோபால் ராவ் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் சாய் பாபா. இந்தப் பதிவில், சத்திய சாயி பாபா வரலாறு தொடர்ச்சியினைக் காண்போம்.
Sai Baba History in Tamil Part 1: பிராமணராய் பிறந்து முஸ்லீம் தம்பதியினருக்குக் குழந்தையான சாய்பாபா….!
சாய்பாபாவிற்கு நேர்ந்த விபரீதம்
அந்த நாள், சாதுர்மாஸ்ய விரதம் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த நேரத்தில், குருவான கோபால் ராவிடம் அபரிமிதமான பக்தியுடன் தொண்டு செய்து கொண்டிருந்தார் பாபா. கோபால் ராவ், சாய் நாதரிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். இதனைப் பார்த்த பிற சீடர்களின் மனதில் சாய்பாபா மீது பொறாமை எண்ணத்தைத் தூண்டி விட்டது. இதனால், சாய் நாதரை அழித்து விட முடிவு செய்தனர் (Sai Baba History in Tamil).
இதற்காகச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவர்கள், பாபா மலர்களைப் பறித்து வருவதற்குத் தோட்டத்துக்குப் போன நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். பாபா தோட்டத்தில் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த சீடர்களில் ஒருவர் பாபா மீது பெரிய பாறாங்கல் ஒன்றை வீசினான். இதைத் தனது கண் திருஷ்டியால் உணர்ந்த குருவான கோபால் ராவ், தனது மந்திர சக்தியால் பறந்து வந்த பாறாங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும் படி செய்தார். இதனைக் கண்ட பக்தர்கள் அதிசயத்தில் மெய்மறந்து நின்றனர் (History of Shirdi Sai Baba).
செய்வதறியாது திகைத்தது
ஆனால், அவர்கள் அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மற்றொரு பெரிய பாறாங்கல் ஒன்று பாபாவை நோக்கிப் பறந்து வந்தது. இதனைக் கண்ட குருநாதர் ஓடிவந்து அதைத் தன் தலையிலேயே வாங்கிக் கொண்டார். அந்த கணத்திலேயே மண்டை உடைந்து ரத்தம் பெருக்கிற்று போனது. இதனைக் கண்ட பாபா துடிதுடித்து, குருவின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடித்தார் (Sai Story Tamil).
கோபால் ராவ் அவரைச் சமாதானப்படுத்தி, “அழாதே குழந்தாய்! நான் உன்னைக் காப்பாற்ற வில்லை. இவை அனைத்தும் அந்த ஏழுமலையான் நிகழ்த்திய லீலை தான். என்னைக் கடவுள் எதற்காக அனுப்பி வைத்தாரோ அந்தக் காரியம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாளை மாலை நான்கு மணிக்கு என்னுடைய வாழ்க்கைப் பயணம் முடிவடைந்து விடும். அதற்குள், நான் என்னுடைய சக்தி அனைத்தையும் உனக்கு அளித்துவிட விரும்புகிறேன். என் அருகில் வா!” என்று சாய்பாபாவைக் கூப்பிட்டு அவரின் தலையை தொட்டு ஆசிர்வதித்தார். அதன் பின், அருகில் உள்ள ஒரு பசுவைக் காட்டில், அதன் பாசுவைக் கறந்து கொண்டுவரச் சொன்னார் (Sai Baba Story Tamil).
இடையன் கூறிய பதில்
பாபா அந்த மாட்டின் அருகே சென்று, அதன் சொந்தக்காரனான இடையனிடம் சென்று சொல்லிக் கேட்டார். ஆனால், அந்த இடையன் கூறிய பதில் திகைக்க வைத்தது. பால் கறப்பதற்கு, இன்றும் கன்று பிறக்கவே இல்லையே? அது எப்படி பால் கறக்கும்? என்று கூறி மறுத்து விட்டான் அந்த இடையன். இதைக் கோபால் ராவ்-விடம் சொன்ன போது அவர், அந்த பசுவை அருகில் வரவழைத்து, அதன் ஒருமுறை தொட்டு ஆசிர்வதித்தார். அப்போது, மாட்டின் மடியில் இருந்த காம்பிலிருந்து பால் சொட்டத் தொடங்கிற்று..! அதை ஒரு பாத்திரத்தில் கறந்து எடுத்துக்கொண்டு வந்தார்கள் (Sai Baba Stories in Tamil).
Sai Baba History in Tamil Part 2: மறுபிறவியாக வந்த சாய்பாபா….! சீரடி சாய்பாபா அற்புதங்கள்…
பசுவின் பாலை அருந்திய சாய் பாபா
குருநாதர், பசுவில் இருந்து கறந்த பாலை சாய்பாபாவை அருந்தச் செய்தார். அதன் சுவை மிக அபூர்வமானதாக இருந்தது. அதைச் சாப்பிட்டதுமே சாய்பாபாவின் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அந்த சமயத்தில் சாய் பாபா, குருநாதரின் கால்களைப் பற்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், நமது searcharoundweb என்ற இணையதளப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…