சீர்காழியில் நெல் பயிரில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை முகாம் நடைபெற்றது. இதில் ஏரளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஹைதராபாத், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறிப்பாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் அண்ணாமலை பல்கலை கழகத்தின் இயற்கை மற்றும் நீடித்த வேளாண்மை மையத்தின் இயக்குனர் ராமன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் நோக்கம், செயல்பாடுகள், மாறிவரும் நவீன வேளாண் சாகுபடி உத்திகளில், எப்படி இயற்கை வேளாண்மையை ஒருங்கிணைப்பது, மண்வளம் குறையாமல் அதிக லாபம் ஈட்டும் முயற்சிகளில் விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுவது, இயற்கை முறையில் பூச்சி கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பயிற்சி முகாமில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் கருவி,தார்ப்பாய் உள்ளிட்ட இலவச உபகரணங்களை வேளாண்துறை சார்பில் வழங்கப்பட்டது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…