Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு குட்நியூஸ்; ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி தொடக்கம்! 

KANIMOZHI Updated:
விவசாயிகளுக்கு குட்நியூஸ்; ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி தொடக்கம்! Representative Image.

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை அருகே வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் துவக்கவிழாவில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல்விளக்கத்துடன் நடைபெற்றது. 

வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து, யூரியா தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் செயல்முறை விளக்க பணியையையும் தொடங்கிவைத்தார். 

ஒரு மூட்டை யூரியாவிற்கு பதில் அரைலிட்டர் திரவ நானோ யூரியாவை பயன்படுத்தி ட்ரோன்கள் மூலம் வயல்வெளிகளில் தெளிப்பதால், விரைவாகவும், சிக்கனமாகவும் பணியை முடிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கினர். இதனை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்