PM Kisan Scheme: பிஎம் கிசான் திட்டத்தில் பழைய விதிமுறைகள் மாற்றப்பட்டு சில புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள நபர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிஎம் கிசான் திட்டம் (PM Kisan Scheme)
பிஎம் கிசான் திட்டம் என்பது விவசாயிகளுக்கான ஒரு திட்டமாகும். மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தவணை முறையின் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டு வந்தது (Kisan Yojana Samman Nidhi).
தவணைத் தொகையாக
இந்த பிரதான் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்கில் ஆண்டு தோறும் ரூ. 6,000 தவணை முறையின் மூலம் செலுத்தப்படுகிறது. அதன் படி, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுதோறும் உதவித் தொகை அனுப்பப்படுகிறது. அதன் படி, இதற்கான 11 ஆவது தவணைத் தொகையாக ரூ. 2000 விவசாயிகளின் கணக்கில் புத்தாண்டு முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார் (PM Kisan Samman Nidhi Yojana Scheme).
புதிய வசதியால் பாதிப்பு
இவ்வாறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்ட இந்த புதிய விதி முறையால், 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்படும் அளவில் உள்ளது. அதாவது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெரிய வசதி பறிக்கப்பட்டுள்ளது (Government Schemes for Farmers).
புதிதாக கொண்டுவரப்பட்ட மாற்றம்
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன் படி, விவசாயிகள் போர்ட்டலுக்குச் சென்று ஆதார் எண்ணிலிருந்து தனது நிலையைச் சரிபார்க்க முடியாது. அதன் படி, அவர்கள் பதிவு செய்யப்பட்ட போது இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுவது அவசியமாகியுள்ளது.
பழைய முறையில், ஆதார் எண்ணை உள்ளிடும் போது, அவற்றில் விவசாயிகள் அவர்களின் நிலையை சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால், தற்போது ஆதார் எண்ணிலிருந்து தனது நிலையைப் பார்த்துக் கொள்ள முடியாதவாறு வைக்கப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான காரணம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறைக்கான காரணம், ஆதார் எண் பரவியது எனக் கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில், ஆதார் குறித்த விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு லீக் ஆனது. அதன் படி, அந்த லீக் செய்யப்பட்ட ஆதார் விவரங்கள் அனைத்தும் பிஎம் கிசான் திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளின் ஆதார் விவரங்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆதார் குறித்த விவரங்களுக்குப் பதிலாக, மொபைல் எண்ணைக் கொண்டு விவசாயிகள் அவர்களின் நிலையை அறிந்து கொள்ளப்படுகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன (Farmers Schemes in Tamilnadu).
PM Kisan திட்டத்தில் விவசாயிகளின் நிலையைக் காண்பது எப்படி? (How to Check PM Kisan Status)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…