ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் மகர ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஆனி மாத ராசிபலன் 2023 மகரம்:
இந்த ஆனி மாதத்தில், மகர ராசி நேயர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாவது உச்சத்தில் இருக்கிறீர்கள். இந்த நிலையில், சனி வக்ர பெயர்ச்சி அடைவது உங்களுக்கு நன்மையைத் தருவதாக உள்ளது. நீண்ட காலமாக நீங்கள் செய்ய நினைத்த விஷயங்கள், இன்று உங்களுக்குச் சாதகமாக அமையும்.
நீண்ட காலமாக முயற்சி செய்த விஷயங்கள், தடையில் இருந்து கொண்டே இருந்த விஷயங்கள் அனைத்தும் விலகி விடும். ராகு பகவான் சுகஸ்தானத்தில் அமைவது நன்மையைத் தருகிறது. இது தாயின் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் விலகி விடும். உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு, கார், பைக் வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு எண்ணி இருப்பீர்கள். இது உங்களுக்குச் சாதகமாக அமையக் கூடிய மாதமாக அமைகிறது.
சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும், ஏழாம் வீடான மனைவி ஸ்தானத்தில் அமைகிறார். மேலும், தொழிலில் லாபம் தருவதாக அமைகிறது. தொழிலில் உங்களுக்கு எதிர்பாராத வகையில் நன்மைகள் வந்து சேரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகளும் விலகி நன்மைகள் உண்டாகும் மாதமாக இந்த மாதம் அமைகிறது.
கேது பகவான் 10 ஆம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். அதன் படி, சுய தொழில் புரியும் நண்பர்களுக்கு இது அருமையான காலமாக அமையும். அதே சமயம், நிதியிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகலாம். எனவே, இந்த நேரங்களில் தேவையற்றவைகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நிதியிழப்பைக் கட்டுப்படுத்தும். பிள்ளைகள் பேரில் சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்த மாதமாக அமைகிறது. திருமணத் தடைகள் நீங்கி, திருமண யோகம் கிடைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். கிரக தோஷங்கள் உள்ள நபர்களுக்கும் நல்ல வரன் கிடைப்பதற்கு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. அரசு உத்யோகத்தில் பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விதமாகவே அமையக் கூடிய மாதமாக அமைகிறது.
தேவையற்ற விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சிறிது சிறிதாக விலகி விடும். நீண்ட நாள்களாக இருந்த கடனைத் திருப்பி அடைவதற்கு இது உகந்த காலமாக அமைகிறது. சூரிய பகவான் 6 ஆம் வீடு என்ற சொல்லக் கூடிய சத்ரு ஸ்தானத்தில் அமைவதால், தேவையற்ற நபர்களால் உங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் அவை அனைத்தையும் காதில் வாங்காமல், உங்கள் வேலைகளை விரைவாகச் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
மகர ராசி நபர்கள், சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், உங்களது கெடுபலன்கள் விலகி நன்மைகள் உண்டாகும். மேலும், நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…