Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது உத்தமம்.. | Aani Matha Rasi Palan 2023 Rishabam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது உத்தமம்.. | Aani Matha Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

ஆனி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் ரிஷப ராசியினருக்கு நீண்ட நாட்களாக நல்ல வரனுக்காக காத்திருந்தவர்களுக்கு திடீரென நல்ல வரன் தேடி வரும். புது வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் உண்டு. அதேபோல், புதுவீடு கட்ட நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஆனி மாதத்திலேயே கட்டுமான பணிகளை தொடங்கலாம். அரசாங்க வேலைக்கு காத்துக்கொண்டிருந்த ரிஷப ராசியினருக்கு உங்க தகுதிக்கு ஏற்ப நல்ல அரசாங்க வேலை கிடைக்க அதிகளவு வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருந்துவந்த மறைமுக எதிரிகள் விலகுவார்கள். சுயதொழிலில் இருந்த இழுபறிகள் நீங்கும். கணவன், மனைவி இடையே அந்நோநியம் அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் மந்தமாக இருந்த வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். இருப்பினும், முடிந்தவரை மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. இல்லையென்றால் தேவையற்ற மனசங்கடங்களுக்கு ஆளாவீர்கள். ரொம்ப நாட்களாக கடன் தொல்லையால் அவதிபட்டுக் கொண்டிருந்த ரிஷப ராசியினருக்கு கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல், உறவினர் அல்லது நண்பர்களிடம் கடனாக கொடுத்த பணம் வசூலாவதில் இழுபறியான சூழல் இருந்திருக்கும். தற்போது அந்த சூழல் நீங்கி பணம் கைக்கு வரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்