ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.
அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் தனுசு ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தனுசு ராசியைப் பொறுத்த வரை, 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையை அடைய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சாதக, பாதக என இரண்டு விதமான பலன்களையும் தர உள்ளது. அதே சமயம், நல்ல பலன்களைக் கொடுக்காவிட்டாலும், பெரிய அளவிலான கெடு பலன்களைத் தரமாட்டார். இளைய சகோதரர், சகோதரி வகையில் இடர்பாடுகள், பிரச்சனைகள் போன்றவை வந்து நீங்குவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, இளைய சகோதரர், சகோதரி வகையில் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது.
மனதில் குழப்பம் உண்டாகலாம். இதனால், மனதளவில் நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். தெளிவான முடிவு இல்லாமல், குழம்பி வலிமையற்று காணப்படுவீர்கள். இவை அனைத்தும் உங்களுக்கு அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. முடிவு எடுத்த பிறகு, அதிலிருந்து பின்வாங்காமல் தெளிவாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல விஷயத்தைக் கூறினாலும், அது தவறாகச் செல்லவும் வாய்ப்பு உண்டு. எனவே, நிதானத்துடனும், சிந்தித்துப் பேசுவதும் சிறப்பு.
குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். கல்வி சார்ந்தவற்றில் செலவு ஏற்படும். போராட்டங்கள் இருந்தாலும், சுபச் செலவு ஏற்படும். பிள்ளைகள் உங்களின் உதவியை நாடி வருவார்கள். செலவு அதிகமாக இருக்கும் போதும், சேமிப்பை மேற்கொள்வது உத்தமம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தடை, தாமதத்தோடு பலன்களைப் பெறுவீர்கள். தெளிவான இலக்கைக் கண்டுபிடித்து, அதன் வழி செல்வீர்கள். குரு பகவானால், சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும்.
எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விலகி தெளிவான சூழ்நிலைக்கு வருவீர்கள். தடைகள் வந்து போகலாம். இருப்பினும், தெளிவாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தந்தையுடன் இருந்த வாக்குவாதங்கள் விலகி அன்புடன் இருப்பீர்கள். தந்தையால் உதவி பெறுவீர்கள். ஆதாயம் கிடைக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை மேன்மை உண்டாகும். திடீர் லாபம், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உதவி மனப்பான்மை உண்டாகும். இதன் மூலம், பெயர், புகழ் உண்டாகும். கடன் சுமையால் இருந்தவர்களுக்கு, சுமை நீங்கி பொருளாதார மேம்பாடு உண்டாகும். அலைச்சல் இல்லாமல், மனக்கவலை இல்லாமல், திருப்திகரமான சூழல் உண்டாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…