நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி விருச்சக ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
விருச்சிக ராசி நேயர்களே, அதிக புத்தி கூர்மையும் சமூகப்பற்றும் கொண்டவர்களாக இருப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். கடந்த காலங்களில் குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து. நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து ஏற்றம் அடைவீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன், உங்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேறும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகம்/வேலை
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடம் மாற்றங்களை அமையும். எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலைக்காக செல்லும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சனைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோனியம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்ப தேவைகள் யாவும் தடை இன்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.
தொழில்/வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
விவசாயம்
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையும். நீர்வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புது மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
கலை
கலைஞர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும். எனவே, உங்களின் நடிப்புத் திறனால் மிகப்பெரிய உச்சத்தை அடைவீர்கள். சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்
பெண்கள்
பெண்களுக்கு இருந்து வந்த உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோனியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகும். கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். மேற்கில்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1,2,3,9.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்டக்கல்: பவளம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபடலாம். செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்லாம். சதுர்த்தி விரதங்கள் இருப்பது கூடுதல் நன்மை. கருப்பு எள் மற்றும் வண்ணமயமான போர்வை ஏழைகளுக்கு தானமாக தரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…