நாம் நண்பர் சொந்தக்காரர் என அவர்களின் கஷ்டத்துக்கு உதவி செய்ய நிதி உதவி செய்திருப்பீர்கள். சிலர் அவர்களின் அவசர தேவைக்காக வாங்கும் பணத்தை நேர்மையாகத் திருப்பி தருவார். ஆனால் சிலரோ அவர்கள் கஷ்டம் தீரும் வரை உங்களை நாடி இருந்தவர்கள் காலப்போக்கில் உங்களை மறப்பது போன்ற சில சம்பவங்கள் நம் அன்றாட வாழ்வில் காண்பதும் உண்டு.
உங்களை மறந்தவர்கள் நீங்கள் கொடுத்த பணத்தை ஞாபகம் வைத்து திருப்பி கொடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே போகும். கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்ற எண்ணம் உங்கள் மனதை வருத்தம் கொள்ள வைக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை உங்கள் வாழ்வில் நடந்துள்ளதா...? நீங்கள் கொடுத்த பணம் திரும்ப வரவில்லையா, இந்த பரிகாரத்தைச் செய்து பாருங்கள் உடனே பணம் கையில் இருக்கும்.
கடன் தந்த பணம் திரும்பி வர செய்ய வேண்டிய பரிகாரம் (Kodutha Kadan Thirumba Vara Pariharam)
நம்மிடம் பணம் வாங்கி நம்மை யாரென்று தெரியாத மாதிரி நடக்கும் மனிதர்கள் பல இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரும் இல்லாமல் இருப்பார்கள், அவர்களிடம் பலமுறை கேட்டும் பணத்தைத் தராமல் சாக்குமட்டும் தான் சொல்லுவார்கள்.
பலமுறை கேட்டும் வராத பணம் இனி வராது என்று மனதளவில் முடிவு எடுத்து கொள்ளுவீர்கள். மனம் தளராமல் கடைசி அஸ்திரம் போல இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் வீட்டின் தெற்கு பகுதி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அந்த தெற்கு பகுதியில் தினமும் காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் 9 அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த பரிகாரத்தைத் தினமும் காலையில் செய்து குலதெய்வத்தை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்து வர நீங்கள் கொடுத்த கடன் பணம் திரும்பி வரும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…