“பணம் பத்தும் செய்யும்” என்பது சான்றோர் சொல், அந்த பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம் ஆகும். வரும் பணத்தை சேமிப்பது தான் சாமர்த்தியமாகும். செல்வத்தைக் கையாளுவதே ஒரு கலை என்று சான்றோர்கள் கூறுவர். இப்படி மகத்துவம் உள்ள செல்வத்தை நாம் சேர்க்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றி அறிய இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.
பணம் சேர செய்ய வேண்டியவை (Veetil Selvam Sera Enna Seiya Vendum)
செல்வம் என்பது லட்சுமி தேவியின் கடாட்சம் நிறைந்ததாக கருதப்படுவதாகும். எனவே நம் முன்னோர்கள் செலவத்தை தெய்வமாக கருதி பலவிஷயங்கள் செய்தனர். அன்று அவர்கள் சாதாரணமாக தங்கள் வாழ்வில் பின்பற்றிய பயன்படுத்திய விஷயங்கள் இன்று காலப்போக்கில் மறந்தது. அதுவே நாம் செய்யும் பரிகாரம் ஆகும். நாம் செய்யப்போகும் செயல்கள் சாதாரணமாக அனைவரும் செய்ய கூடியவை தான்,
1. பூஜை அறையில் செம்பு
நம் வீட்டில் இறைவன் படம் வைத்து வழிபாடு செய்யும் அறையில் அல்லது இடத்தில் பித்தளை பொருட்களை அதிகமாக பயன்படுத்தல் செல்வத்தை சேர்க்கும். செம்பு எதிர்மறை எண்ணங்களை நீக்கும் வல்லமை கொண்டது. பூஜை அறையில் முடிந்த வரை செம்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது வீட்டில் செல்வத்தை சேர்க்கும். ஒரு செம்பு குடத்தில் நீர் நிரப்பி தினமும் பூஜை செய்து தீர்த்தமாக குடித்தல் வேண்டும்.
2. அரிசி படி
நம் முன்னோர்கள் பெரும்பாலும் சமையல் பாத்திரத்தில் அரிசி அளக்கும் படி இருக்கும், அரிசி படியில் அன்னபூரணி நிறைந்ததாக நம்பிக்கை. எனவே தினமும் அரிசியை எடுக்க படியை பயன்படுத்தல் வேண்டும். படியில் அரிசி எடுக்கும்போது தினமும் கும்பிட்டு அரிசி எடுப்பது சந்ததிக்கு வறுமை இல்லாத வளமான வாழ்க்கை அளிக்கும்.
3. உமி நீக்கும் சல்லடை
அம்மி, ஆட்டுக்கல் போல நம் வீட்டில் கட்டாயமாக இருக்க வேண்டியவை இந்த உமி நீக்கும் சல்லடை ஆகும். உமி நீக்கும் சல்லடை லட்சுமி அம்சமாகும், எனவே நாம் வீட்டில் சமையல் அறை அல்லது பொருட்களை சேமிக்கும் அறையில் இதை வைத்திருப்பது செல்வ வரவை அதிகப்படுத்தும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…