ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.
அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் மேஷ ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு 11-ம் வீட்டில் சனி பகவான் வக்கிர நிலையை அடைய போகிறார். இது உங்களுக்கு நல்லது அல்ல. ஏனெனில், பொருளாதார தேவைகளை அதிகமாக்கும் வாய்ப்புள்ளது. அதனால் எதற்கு செலவு செய்தாலும் கவனமாக தேவைக்கு ஏற்ப செலவு செய்யுங்கள். இந்த நிலையில் யாருக்கேனும் கடன் கொடுத்து உதவும் போது யோசித்து செயல் பட வேண்டும். ஏன் என்றால், நீங்கள் கொடுத்த பணம் திரும்ப வர நீண்ட நாட்களாகலாம். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மூத்த சகோதரர்/சகோதரிகளிடத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை குறைப்பது நல்லது. உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
ஆடம்பர பொருட்கள் மீது ஆசை அதிகரிக்கும். ஒரு தெளிவு இல்லாமல் ஏதேனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மந்தத்தன்மையுடன் இருப்பீர்கள், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். மனதில் பிள்ளைகளால் நிலையற்ற சிந்தனைகள் ஏற்படும். எடுக்கும் முடிவுகளை தீர யோசித்து எடுக்க வேண்டும். பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் வழக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. எனவே, இந்த 141 நாட்கள் எந்த செயல் செய்தாலும் யோசித்து செயல்பட்டால் நடக்க இருக்கும் கண்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். மேலும் சனி பகவானை சாந்தி படுத்த, வாரா வாரம் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம் அல்லது இல்லாதவர்களுக்கு உதவுவது கூடுதல் நற்பலன்களை தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…