நம் வாழ்வில் நாம் பிறந்து வளர்ந்து பருவம் தொட்டவுடன் திருமணம் செய்வது வழக்கம் தான், பூமியில் அனைத்து ஜீவராசியும் துணையின்றி வாழ்வதே இல்லை அதுபோல மனிதனின் வாழ்விலும் துணை தேவையாகும். மனிதனின் சுகதுக்கத்தில் முழுமையாகப் பங்கு கொள்வது திருமணப் பந்தத்தால் வரும் வாழ்க்கைத் துணையே ஆகும். வாழ்வின் மொத்த அர்த்தமான திருமணம் பல பேருக்கு நடப்பதில் தடங்கல் ஏற்படுகிறது, திருமணத் தடை தீர நாங்கள் கூறும் பரிகாரத்தை (Thirumana Thadai Pariharam) செய்தால் திருமணத் தடை நீங்கும்.
![](https://lh4.googleusercontent.com/9Nm1rQ7OcPRbmLenQRB70nUfIA-aMD1WpMRH9Xuptl5YVfBV8-yqOIxqR0rhLXBG50Dn23M7BLYmLNF5xF9i5IYO-eo888KeF43qqXqSDm46MqyM8Nk0b8vXWRYEN8YUNMYc-kWw)
திருமணத் தடை பரிகாரம் (Thirumana Thadai Pariharam)
- விரைவில் திருமணத் தடை நீங்க அதிகாலையில் 108 முறை வேம்பு அரசு மரத்தைச் சுற்ற வேண்டும். இவ்வாறு செய்வது சிவனையும் பார்வதியையும் சுற்றி வலம் வந்து திருமண வரம் கேட்பதற்குச் சமமாகும்.
- திருமணத் தடை நீங்க வாரம் ஒருமுறை அதிகாலையில் வேம்பு அரசு மரத்தின் அடியிலிருக்கும் விநாயகருக்கு விளக்கு ஏற்ற வேண்டும், நீங்கள் ஏற்றும் விளக்கின் முன் அருகம்புல் மற்றும் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும்.
- திருமணமாகக் குருபார்வை அவசியமாகும், குருவின் பார்வை பெற 9 வாரங்களுக்கு வியாழன்தோறும் குருபகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
- நீண்டகாலமாகியும் அதாவது 35 வயதாகியும் திருமணமாகாதோர் தன் கையால் ஒரு வாழை மரம் நட்டு பராமரித்து, பெருமாள் வழிபாடு இருந்து வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று உப்பில்லாத உணவை உண்ண வேண்டும். இப்படிச் செய்வது நீண்ட நாள் திருமணத் தடையை நீக்கும்.
- ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் அருகிலுள்ள அம்மன் சன்னதி சென்று அம்மன் முன் அமர்ந்து தியானம் செய்து, குங்குமத்தைத் தானமாகக் கொடுப்பது திருமணத் தடையை நீக்கும். முக்கியமாகத் திருமணத் தடை உள்ள பெண்கள் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் திருமணத் தடை நீங்க வழி செய்யும்.
- நீண்ட நாளாகத் திருமணத் தடை கொண்ட பெண்கள், வெள்ளிக்கிழமை தோறும் சூரியன் உதயத்திற்கு முன்பே குளிக்கும் நீரில் சிறு மஞ்சள் மற்றும் ஒரு குங்குமப்பூ போட்டுக் குளித்து வீட்டில் விளக்கு ஏற்ற விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெற்று விளக்கேற்றும் யோகம் கிடைக்கும்.
- திருமணத் தடையுள்ள ஆண் அல்லது பெண், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இராகு காலத்தில் சென்று துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வணங்க வேண்டும். இதுபோல 27 வாரங்கள் தொடர்ந்து செய்து வர திருமணத் தடைகள் நீங்கும்.
- திருமணத் தடை நீங்கக் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும், 27 வாரம் தொடர்ந்து பூஜித்து 27வது வாரம் ஒன்பது செம்பருத்திப் பூவுடன் சிகப்பு நிற ஆடை மற்றும் கொண்டைக்கடலை வைத்து மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிகப்பு நிற ஆடை, செம்பருத்தி பூ, கொண்டைக்கடலையை அருகிலுள்ள குளத்தில் விடவேண்டும்.
மேலே, குறிப்பிட்டுள்ள பரிகாரத்தைச் சரிவர மனமார செய்வதன் மூலம் திருமணத் தடை நீங்கி விரைவில் மணக்கோலம் காண்பீர்கள்.
மேலும் படிக்க: நீண்ட நாளா குழந்தை இல்லையா!.. இந்த பரிகாரம் செய்வதால் குழந்தை வரம் கிடைக்கும்..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…