ஏதர் நிறுவனத்தின் அடுத்த லேட்டஸ்ட் மாடல் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏதர் எனர்ஜி என்னும் பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ஏத்தர் நிறுவனம் தங்களின் புதிய மாடல் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது இந்த ஸ்கூட்டரின் புகைப்படத்தை நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்கூட்டரில் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதால், அறிமுகத்திற்கு முன்னர் தெரிய கூடாது என்பதற்காக வண்டியின் முன்பக்கம் புகைப்படத்தில் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் ஷ்கிரீன் டச் மூலம் நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியாது. அத்துடன் நேவிகேஷன் ஆப்ஷனும் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக ப்ளூ-டூத் இணைப்பு அம்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புது ஸ்கூட்டரில் சிறிதளவு 3kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதில் நமக்கு குறைவான ரேன்ஜ் தான் கிடைக்கும். இருப்பினும் பேட்டரி முழுமையான சார்ஜ் செய்து பயன்படுத்தினால் 115கிமீ வரையில் செல்ல முடியும். அதே போல், 90kmph வேகத்திற்கு ஓட்டலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த வண்டிக்கான ப்ரீ-புக்கிங் இந்தியா முழுவதும் துவங்கிவிட்டது. இத்தனை அம்சங்கள் கொண்ட 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ 1.30 லட்சம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…