தமிழகத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாரணை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களில் இயங்கும் மாற்றாக பேட்டரி வாகனங்களின் வரத்து அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது. எரிபொருட்கள் விலை உயர்வால், நடுத்தர மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தற்போது பேட்டரிகள் மூலம் இயங்கும் வாகனங்களை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் அல்லாத மெத்தனால், எத்தனால் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு இனி தமிழகத்தில் எந்தவொரு அனுமதிக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு வாகனம் தவிர்த்து, 3 ஆயிரம் கிலோ எடைக்கும் குறைவான வாகனங்களுக்கும் இந்த அனுமதிக்கட்டண ரத்து உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…