கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து தொழிலும் திடீரென சரிவை கண்டது. இந்த சரிவு பண வீக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் இதை சரிக்கட்ட பல நடவடிக்கைகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பணவீக்கத்தை மேற்கோளிட்டு மாருதி நிறுவனம் காரின் விலையை உயர்த்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாகப் பார்ப்போம்.
சந்தையில் அதிகரித்துள்ள உதிரிப் பாகங்களின் விலை மற்றும் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கலாம். இந்த பாதிப்பை சரிக்கட்ட சில நடவடிக்கைகளை மாருதி நிறுவனம் செய்ய உள்ளது. அதாவது நவம்பர் மாதம் மாருதி சுஸூகி 1,59,044 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை அதிகரித்தாலும் உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை உற்பத்தியை பாதித்து உள்ளது.
இதன் விளைவாக மாருதி சுஸூகி நிறுவனத்தின் பங்கு 1.58% குறைந்தது. எனவே, பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறை செலவை சரிசெய்ய ஜனவரி 2023 முதல் மாருதி சுஸுகி கார்களின் விலை அதிகரிக்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸூகி கார்களின் பிரபலமான Swift, Alto, Baleno போன்ற மாடல்களின் விலை 22,000 வரை அதிகரிக்குமாம். மாருதி சுஸூகியின் புதிய அறிமுகமாக வரும் ஜிம்னி காரின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…