இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்துவருகிறது, இதற்கு மாற்றாக மின்சார வாகனங்களை தயாரித்து வெளியிட முழுவதுமாக மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது. மேலும் எத்தனால் பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் பாதி வெற்றியும் அடைந்துள்ளது. மேலும் விரைவில் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு சர்க்கரை மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:இந்தியாவில் மாற்று எரிசக்தியை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உள்ளது. அதன் முக்கிய பங்கு எத்தனாலுக்கு உள்ளது. தற்போதைய சூழலில் 1,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. ஆனால், 730 கோடி லிட்டர் தான் உற்பத்தி செய்யப்படுகிறது வ்ன கூறியுள்ளார்.
தற்போது உலகில் சர்க்கரையின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்தே சர்க்கரையின் விலையும் இருந்து வருகிறது.
நாட்டில் மெத்தனால், எத்தனால் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் மின்சார அவாக்கங்களின் தேவையும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
பஜாஜ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் எத்தனால் பயன்பாடு கொண்டும் இயங்கும் விதமான வாகனங்களை உருவாக்குவது குறித்து வலியுறுத்த இருக்கிறேன். இந்த எரிசக்தியில் இயங்கக் கூடிய என்ஜின்களை அந்த நிறுவனங்கள் வடிவமைக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் மின்சார டிராக்டர்கள், லாரிகளை அறிமுகம் செய்யும் திட்டதை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது’’ என்று பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…