Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு எஸ்.எம்.எஸ் வராததால் வாடிக்கையாளர்கள் அச்சம்..  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கம்...

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 10:40 [IST]
சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு எஸ்.எம்.எஸ் வராததால் வாடிக்கையாளர்கள் அச்சம்..  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கம்...Representative Image.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில், சமையல் கேஸ் சிலிண்டர் வேண்டி ஆன்லைனில் பதிவு செய்யும் போது, வாடிக்கையாளர்களின் மொமைல் போன் எண்களுக்கு ஒப்புதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதை வைத்து வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கிக்கொண்டிருக்கின்றன. இதனடிப்படையில் தமிழகத்தில் 1.40 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவிக்கிறது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக பதிவு செய்யும் போது, வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு ஒப்புதல் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுவதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பதிவானதா, டெலிவரி செய்யப்படுமா என்று குழம்பிப்போய் இருந்தனர்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பதிவு செய்ததும், அவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு ஒப்புதல் எஸ்.எம்.எஸ்., வரவில்லை என்றாலும், பதிவு விபரங்கள், 'சர்வரில்' பதிவாகின்றன. எனவே, பதிவு செய்வதற்கு ஏற்ப வழக்கம்போல சிலிண்டர் உடனுக்குடன் டெலிவரி செய்யப்படும். யாரும் சிலிண்டர் டெலிவரி தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்