முன்னரே, இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்யும் நபர்கள் செய்யும் செலவினங்களை நிறைவேற்றுவதற்காக கிரெடிட் கார்டு வசதியான சர்வதேச கடன் அட்டைகளின் பயன்பாட்டை LRS வரம்பில் சேர்க்கப்படவில்லை.
கிரெடிட் கார்டு வசதியை தற்போது பெரும்பாலானோர் பெற்று வருகின்றனர். அதே சமயம், வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு வசதியை உபயோகிப்பவர்களுக்கு ICC பயன்பாடு LRS வரம்பில் சேர்க்கப்படவில்லை.
அந்நியச் செலவாணியில் செலவிடுவது சர்வதேச கிரெடிட் கார்டுகள் மூலமாக ரிசர்வ் வங்கியின் தாரளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். அதன் படி, குடியிருப்பாளர், ஆண்டுக்கு அதிகபட்சமாக $2.50 லட்சம் வரையிலான தொகையை ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இல்லாமல் வெளிநாட்டு அனுப்ப முடியும்.
தற்போது LRS-ல் சர்வதேச கிரெடிட் கார்டு கொடுப்பனவுகளைச் சேர்ப்பதற்கு, அன்னிய செலவாணி மேலாண்மையின் திருத்தம் செய்யப்பட்ட விதிகள் கடந்த மே 16 ஆம் நடந்தது. மேலும், வெளிநாட்டு நாணயஹ்தில் மணம் அனுப்பும் போது, $2.5 லட்சத்திற்கு மேல் அல்லது இதற்கு இணையான வெளிநாட்டு நாணயத்திப் பணம் அனுப்புபவர்கள்க்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அவசியம்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி, நிதி அமைச்சகமானது, பயணத்தின் போது ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, அந்நியச் செலவாணி மேலாண்மை விதிகளில் திருத்தம் கொண்டு வர உல்ளது.
2023-24 ஆம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டில் TCS விகிதங்களை 5%-லிருந்து 20% ஆக உயர்த்தியது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பேக்கேஜ்கள் மற்றும் LRS-ன் கீழ் அனுப்பப்படும் நிதிகளுக்கு புதிய வரி விகிதங்கள் வரும் ஜூலை 01, 2023 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கிராண்ட் தோர்ன்டன் பாரத் பார்ட்னர், ரியாஸ் திங்னா அவர்கள் கூறுகையில், தனிப்பட்ட அல்லது வணிக நோக்கங்களுக்காக செலவு இருப்பினும், இதன் விளைவாக டிசிஎஸ் தாக்கம் உள்ளது கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…