டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. ஒரு டாலருக்கும் 80 காசுகளுக்கு மேல் சென்று சரிவைக் கண்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையும் தொடர் சரிவில் செல்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகச் சரிந்துள்ளது. இன்றும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டு வந்துள்ளது அதன் படி இன்று வரலாறு காணாத அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.18 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நேற்றைய மதிப்பை விட 39 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது, கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவாகக் கருதப்படுகிறது. இதே போல, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தற்போது 58,493 புள்ளிகளில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…