Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அம்பானியை தொடர்ந்து.. அதானிக்கும் இசட் பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு!!

Sekar August 11, 2022 & 09:54 [IST]
அம்பானியை தொடர்ந்து.. அதானிக்கும் இசட் பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு!!Representative Image.

கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் உளவுத்துறையான ஐபி அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், தொழிலதிபர் கௌதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஆதாரங்களின்படி, ஐபியிடமிருந்து பெறப்பட்ட அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில், அதானிக்கு அரசாங்கத்தால் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பாதுகாப்புக்கான செலவை அதானியே ஏற்றுக்கொள்வார்.

கவுதம் அதானியின் பாதுகாப்பில் 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோருக்கும் உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதற்கான செலவை அவர்களே செலுத்துவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்