தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், இன்றும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்தது. ஏற்றம் இருந்தாலும் பெரும் அளவில் இல்லாமல் மிகக் குறைவான அளவிலேயே ஏற்றம் அடைந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ஒரு கிராமிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்திற்கு ரூ.64 அதிகரித்து, 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தூய தங்கமான 24 காரட் ஒரு கிராமிற்கு 5,042 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,336 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.62.30 ஆக உள்ளது அதன் படி, ஒரு கிலோ வெள்ளி விலை 62,300 ரூபாயாக உள்ளது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கம், தற்போது அதிகரித்துக் காணப்படுவதால்,அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…