தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520/- அதிகரித்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் 10 ஆம் தேதி முதல் இன்று வரைக்குமான தங்கம் விலை ஏற்றத்தை பற்றி பாப்போம்.
மார்ச் 10 - தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.41,520க்கு விற்பனையானது.
மார்ச் 11 - ஒரு கிராம் ரூ.80/- அதிகரித்து ரூ.5,270க்கும், சவரன் ரூ.ரூ.640 உயர்ந்து ரூ.42,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் முந்தின நாளின் விலையில் தங்கம் விற்கப்பட்டது.
மார்ச் 13 - நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.50/- உயர்ந்து ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120க்கும் விற்கப்பட்டது.
சரி இன்றாவது தங்கம் விலை சற்று குறையுமா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்யாகிவிட்டது. ஏன்னெனில் இன்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.60/- உயர்ந்து ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1880/- உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…