தமிழகத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களைப் பொறுத்து தினமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்றம் இரக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 25) இல்லத்தரசிகளுக்கு வேதனைத் தரும் விதமாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.45,040/-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.70 காசுகள் உயர்ந்து, ரூ.80.07க்கும் ஒரு கிலோ ரூ.80,700க்கும் விற்பனையாகி வருகிறது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்றமும் இரக்கமும் மாறி மாறி வரும் நிலையில் தற்போது தினமும் அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…