தமிழகத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களைப் பொறுத்து தினமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்றம் இரக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 10) இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.44,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து, ரூ.80க்கும் ஒரு கிலோ ரூ.80,000க்கும் விற்பனையாகி வருகிறது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்றத்தை மட்டும் கொண்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…