ஏப்ரல் மதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சற்று சரிந்து வந்த நிலையில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கவும் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் எண்ணத்தில் மண்ணல்லி போடும் வகையில் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது தங்கத்தின் விலை.
நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.520/- உயர்ந்து ரூ. 44,800க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்றோ இன்னும் அதிகரித்து ரூ.720/- அதிகரித்து தங்கம் ஒரு கிராம் ரூ.5,690க்கும், ஒரு சவரன் ரூ. 45,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,240/- உயர்ந்து ரூ.45,000/- தாண்டி விற்பனை செய்யப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70க்கு விற்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…