அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து, வீழ்ச்சியை அடைந்துள்ளது.
கொரோனாவால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதால் அதிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறூ நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்ய நாடுகளுக்கிடையேயான போர், உலக நாடுகளின் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகிறது.
இதனால், போரால் கச்சா எண்ணெய், உணவு தானியங்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொருள்களின் விலை அதிகரித்ததுடன் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
அன்னிய செலவாணி சந்தையில் டாலரின் தேவையை அதிகரித்து, அதற்கான மதிப்பை உயர்த்தியுள்ளது. அதே சமயம், முதலீடுகள் பல நாடுகள் டாலருக்கு மாற்றி வருகிறது. இதன் காரணமாகவும் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. அதன் படி, இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் குறைந்து, அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 83.02 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மேலும் விலைவாசி உயர்வு ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…