Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போன் ஒட்டுக்கேட்பு.. முன்னாள் பங்குச்சந்தை தலைவரை கைது செய்த அமலாக்கத்துறை!!

Sekar July 14, 2022 & 18:57 [IST]
போன் ஒட்டுக்கேட்பு.. முன்னாள் பங்குச்சந்தை தலைவரை கைது செய்த அமலாக்கத்துறை!!Representative Image.

பணமோசடியுடன் தொடர்புடைய சட்ட விரோதமாக பங்குச்சந்தை ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் வழக்கில் என்எஸ்இ முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க இயக்குனரகம் இன்று கைது செய்தது. 

நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறப்பு நீதிபதி சுனைனா சர்மா சித்ரா ராமகிருஷ்ணனை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். சித்ரா ராமகிருஷ்ணன் ஏற்க்கனவே வேறொரு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை விசாரிக்க நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை அனுமதி பெற்றது.

எனினும் சித்ரா ராமகிருஷ்ணன் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் ஒன்பது நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.

ஆனால், அவரை நான்கு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்