உலக அளவில் முதலீட்டாளர்கள், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால், விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.
சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கத்தின் விலையானது ரூ.520 உயர்ந்துள்ளது. இதனால், சவரனுக்கு ஆபரணத் தங்கம் 43,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கமானது ரூ.5,390-க்கு விற்பனையானது.
இதே போல, வெள்ளி விலையும் 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்தது. அதன் படி, ஒரு கிராமிற்கு 72 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் Signature போன்ற இரண்டு வங்கிகள் திவாலானது. இதன் காரணமாக, பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன் படி, கடந்த 5 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரித்திருந்ததால் நகை வாங்கத் திட்டமிட்டோர் அதிர்ச்சியடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…