Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிரடியாக உயர்ந்த அரிசி விலை… அதுவும் 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு… எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani September 09, 2022 & 12:40 [IST]
அதிரடியாக உயர்ந்த அரிசி விலை… அதுவும் 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு… எவ்வளவு தெரியுமா..?Representative Image.

தமிழகத்தில் குறைவான நெல் சாகுபடி காரணமாக அரிசி விலை உயர்வதுடன், அரிசி தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் ஏற்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 தமிழகத்தில் நெல் தட்டுப்பாடு காரணமாக அரிசி விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு அரிசி  ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாகவும், அரிசி விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள அனைத்து வகையான அரிசிக்கும் விலை உயர்த்த்ப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து அரிசி வகைக்கும், விலையானது 26 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு அரிசியின் வகைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 07, 2022 ஆம் நாள் நிலவரப்படி, 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையில் பழைய மற்றும் புதிய விலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரிசி வகை

பழைய விலை

விலை உயர்வு

புதிய விலை

பொன்னி அரிசி

ரூ.900

ரூ.300

ரூ.1,200

புல்லட் அரிசி

ரூ.980

ரூ.200

ரூ.1,280

பொன்னி பச்சை அரிசி

ரூ.1,050

ரூ.200

ரூ.1,250

இட்லி அரிசி

ரூ.690

ரூ.160

ரூ.850

பாசுமதி அரிசி

ரூ.2,200

ரூ.300

ரூ.2,500

 

அன்றாட உணவிற்காக 1 கிலோ முதல் 5 கிலோ வரையிலான அரிசி வாங்கி சமைக்கும் ஏழை எளிய மக்கள், இந்த விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்